Breaking News

எப்போதும் சொல்வோம் நமசிவாய !


கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத்
துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ
வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில்
இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும்,
எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்!
எதிலும் சிவமயம்!
ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும்
ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன்
கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும்.
சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில்
கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக்
கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில்
விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன்
அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ
நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால்
நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம்
தூய்மை அடையும். 
:நன்றி ''தினமலர்''

No comments